நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தால் நாங்கள் காந்தி-நேரு குடும்பத்தின் அடிமைகள்தான்.. ராஜஸ்தான் எம்.எல்.ஏ. பேச்சு

 
பிரியங்கா காந்தியின் இலக்கு இதுதான்… ராகுல் காந்தி விளக்கம்

நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தால் நாங்கள் காந்தி-நேரு குடும்பத்தின் அடிமைகள்தான் என்று ராஜஸ்தானை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் மாநில சிரோஹி சட்டப்பேரவை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. சன்யம் லோதா. இவர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று ஹரிதேவ் ஜோஷி பத்திரிகை மற்றம் மக்கள் தொடர்பு பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா 2022ன் மீதான விவாதத்தின் போது சன்யம் லோதா பேசுகையில் கூறியதாவது:

சன்யம் லோதா

நாங்கள் காந்தி-நேரு குடும்பத்தின் அடிமைகள் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. என்று கூறினார். ஆம் கடைசி மூச்சு வரை நாங்கள் அடிமைகள். காந்தி-நேரு குடும்பம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தால் நாங்கள் அடிமைத்தனத்தை தொடர்ந்து செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுயேட்சை எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

ராஜேந்திர ரத்தோர்

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் துணை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர ரத்தோர் இது தொடர்பாக கூறுகையில், இது ஒரு புதிய கலாச்சாரம் வந்து விட்டது. இந்த அடிமைத்தனத்திறகு வாழ்த்துக்கள்.ந நீங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தி கொடுப்பீர்கள்? என்று தெரிவித்தார்.