சென்னை வந்தார் அமித்ஷா: ஓபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கினார்- எடப்பாடிக்கு இன்னும் நேரம் ஒதுக்கவில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதற்காக அவர் சென்னை வருகை தந்திருக்கிறார்.
சென்னையில் ஆர்.ஏ. புரத்தில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்குகி இருக்கிறார். காலை 10:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 10.55க்கு விழா நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு செல்கிறார்.
சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் இதுவரையும் சந்திக்க உள்ளார். இன்று பிற்பகல் 2:30 மணிக்கு அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் . எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திக்கும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மாலை 3 மணி அளவில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை நாலு மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா கார் செல்லும் காமராஜர் சாலை, வாலாஜா சாலை முழுவதும் பாஜக தொண்டர்கள் வரிசையாக நின்று அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமித்ஷா, தமிழ்நாட்டிலும் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்ய அவ்வப்போது முயன்று வருகிறார். அதிமுகவின் மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் ஓபிஎஸ்சை சந்திக்க அனுமதி கொடுத்திருக்கிறார். எடப்பாடிக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. இருவரையும் சந்திக்கும்போது அதிமுகவிலிருந்து பிளவு பட்டு நிற்பவர்களை ஒன்று சேரச் சொல்லி வலியுறுத்துவார் என்று தெரிகிறது.