ஆகஸ்ட் 4ல் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் வழக்கு நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்துகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 11ஆம் தேதி அதிமுக என்கிற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழுவை கூட்டுவதற்கு உத்தரவிடவில்லை. சட்டப்படி பொதுக்குழுவை கூட்டலாம் என்று சொல்லி இருந்தோம். தவிர, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு அவர்கள் கூட்டவில்லை. தவறுதலாக ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. முன்னர் கொடுக்கப்பட்ட எந்த தீர்ப்புகளையும் எடுத்துக் கொள்ளாமல் மிகத் தெளிவாக விசாரணை செய்து தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். வைரமுத்து கொடுத்த மனுவையும் ஏற்றுக்கொண்டு தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவினை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ச்சியாக நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது . சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் அதிமுக பொது குழு வழக்கு விசாரணைக்கு வருகிறது .
ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோரின் வழக்குகளை இரண்டு வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து நாளை மறுதினம் நாலாம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரிக்க இருக்கிறார்.