திமுக அரசை தற்போது காப்பாற்றியது அதிமுகவின் 10 ஆண்டு நடவடிக்கை -ஜெயக்குமார்

 
j

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஆறுகள், குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன.  இன்று பகல் பொழுதில் கொஞ்சம் மழை ஓய்ந்திருந்த நிலையில்  மழை நீர் வடிந்து இருந்தது.  இந்நிலையில் மீண்டும்  இன்று இரவு மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

 இந்த நிலையில் இன்று வடசென்னையில் திருவிக நகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியம் சிக்கன் பிரியாணி வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

e

 அப்போது  அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.  அவர்களிடம் பேசிய ஜெயக்குமார்,   அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படியே அதிமுகவினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வருகின்றார்கள் என்றார்.   இரண்டு நாள் பெய்த மழையையே திமுக அரசால் சரியாக கையாள முடியவில்லை.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கூட வழங்கவில்லை என்று  திமுக அரசு மீது  குற்றம் சாட்டினார்.

 அவர் மேலும்,  மழை நீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.   அதனால்தான் பல இடங்களில் மழையின் நீர் வடிந்து இருக்கிறது தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவின் இயலாமை தான் மழை நீர் அதிகமான இடங்களில் தேங்கி நிற்கிறது என்றார்.

தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஜெயக்குமார்,  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மேற்கொண்ட நடவடிக்கை தான் திமுக அரசை தற்போது காப்பாற்றி இருக்கிறது என்றார் .