2014 முதல் 2022 வரை 211 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்... ஆம் ஆத்மி எம்.பி.

 
சஞ்சய் சிங்

ஜனநாயக சீர்த்தீருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2014 முதல் 2022 வரை 211 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர் என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தின்போது, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்தியது என குற்றம் சாட்டினார். மாநிலங்களவையில் சஞ்சய் சிங் பேசுகையில் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் வெளியில் பேசவோ, நாடாளுமன்றத்துக்குள்ளும் இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. அமலாக்க இயக்குனரகத்தை தவறாகப் பயன்படுத்தி கடந்த 8 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சுமார் 3 ஆயிரம் ரெய்டுகள் நடத்தப்பட்டன. ஆனால் மறுபுறம் அமலாக்கத் துறை வெறும் 23 பேரை மட்டுமே அதாவது 0.5 சோதனைகள் மற்றும் தேடுதல்களில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. 

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

ரூ.20 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை ஏன் மௌனம் சாதித்தது?. நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா மற்றும் வியாபம் ஊழல் கொள்ளையர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எனது கேள்வி?. உங்களுடன் தொடர்புடைய அனைத்து ஊழல்வாதிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் 14 மணி நேரம் நடத்தப்பட்டது, அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார். 

மணிஷ் சிசோடியா

அனைத்து அமைச்சர்கள் மீதும் சோதனை நடத்தப்பட்டது. கொடுமை மற்றும் சர்வாதிகாரத்துடன் நாட்டை நடத்த விரும்பினால், அனைவரையும் சிறையில் தள்ளுங்கள். ஜனநாயக சீர்த்தீருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2014 முதல் 2022 வரை 211 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். தன்னிச்சையான விலகல்கள் அரசாங்க மட்டத்தில் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டத்திலும் ஆணையை அழிக்க வல்லவை என்பதை வளர்ச்சி நிரூபிக்கிறது. ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்போது நகராட்சியை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.