சசிகலா பற்றிய ஒரு கேள்வி - மூன்று முறை பதில் சொன்ன உதயகுமார்

 
ர்ப்

 ஒற்றுமை என்று குறிப்பிட்ட சசிகலா பற்றிய கேள்விக்கு நன்றி வணக்கம்! நன்றி வணக்கம்! நன்றி வணக்கம்! என்று  மூன்று முறை சொல்லிவிட்டு தெறித்து ஓடினார் உதயகுமார்.

 முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை  சந்தித்தார்.   அப்போது,   அதிமுகவை பொறுத்தவரையில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்கிற தெளிவான தீர்வை வழங்கியிருக்கிறது.   எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை வழிநடத்துவது பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது என்று தெரிவித்தார்.

ச

 அதிமுகவினர் அனைவரும் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு மனதாக அதிமுக வெற்றிக்கு உழைப்பதற்கு தயாராக உள்ளனர்.  அதிமுக ஒற்றுமையாக தான் இருக்கிறது என்று நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது என்று சொன்னார்.

 அப்போது குறிப்பிட்ட செய்தியாளர்கள்,     ஒற்றுமை என்பது குறித்து சசிகலா  சொன்னதை பற்றி கேள்வி எழுப்பினர்.   விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்து செய்தியில்,  சகோதரத்துவம் மனித நேயம் தலைக்கட்டும்.  வேற்றுமைகள் களைந்து ஒற்றுமை ஓங்கட்டும்.  துரோக சிந்தனைகள் அழிந்து உண்மைகள் உயிர் பெறட்டும் என்று தெரிவித்திருந்தார் சசிகலா.  அதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு உதயகுமார்,  நன்றி வணக்கம்! நன்றி வணக்க! நன்றி வணக்கம்! என்று மூன்று முறை சொல்லிவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடினார்.