ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்;தயாராகிவிடுங்கள்…கமல்!

 

ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்;தயாராகிவிடுங்கள்…கமல்!

சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மற்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களூக்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம்;தயாராகிவிடுங்கள்…கமல்!


பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்.

அதுகுறித்து அவர், ‘’ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்’’என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி வரவிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.