அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக்கொண்டு வரும் காவி ஆண்மகனுக்கு ஒரு கோடி பரிசு - அறிவித்தவர் கைது
அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ஒரு கோடி ரூபாயும் ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்து மக்கள் புரட்சி படையின் மாநில அமைப்பாளர் கண்ணன் அறிவித்திருந்தார். இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அண்மையில் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய திமுக எம்பி ஆ. ராசா, இந்து மதம் குறித்து மிகவும் அவதூறாக பேசி விட்டதாக இந்துக்கள் கொதித்தெழுந்து உள்ளனர். பாஜகவினர் தமிழகமும் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்து வருகின்றனர். ஆ. ராசாவை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆ. ராசாவுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்த இந்து மக்கள் புரட்சி படையின் மாநில அமைப்பாளர் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த பசுக்காரன்பட்டியில் வசித்து வருகிறார் கண்ணன். இவர் தனது முகநூல் பக்கத்தில், இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அந்நிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக எம்பி ஆ. ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் எனக் கூறி வரும் அரசியல் விபச்சாரியே... இந்த அரசியல் விபச்சாரியின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதை அடுத்து திமுகவினர் அளித்த புகார் இன் பேரில் உத்தப்ப நாயக்கனூர் போலீசார் கண்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.