“அந்த போலீஸ் அதிகாரி அடிக்கடி போன் பண்ணி அதுக்கு கூப்பிடுறார்” -புகாரளிக்க போன பெண்ணின் நிலை.

 

“அந்த போலீஸ் அதிகாரி அடிக்கடி போன் பண்ணி அதுக்கு கூப்பிடுறார்” -புகாரளிக்க போன பெண்ணின் நிலை.


புகாரளிக்க போலீஸ் ஸ்டேஷன் வந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

“அந்த போலீஸ் அதிகாரி அடிக்கடி போன் பண்ணி அதுக்கு கூப்பிடுறார்” -புகாரளிக்க போன பெண்ணின் நிலை.


உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டின் பார்கேரா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக ராம்கோபால் என்பவர் பணியமர்த்தப்பட்டார் .இந்நிலையில் அந்த காவல் நிலையத்துக்கு கடந்த வாரம் ஒரு இளம் பெண், ஒரு வழக்கு சம்பந்தமாக புகாரளிக்க வந்தார் .அப்போது அந்த பெண் தன்னுடைய போன் நம்பரை அந்த சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார் .
அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் போன் நம்பருக்கு அடிக்கடி போன் பண்ணி பேசியுள்ளார் .பின்னர் அந்த பெண்ணை வழக்கு விஷயமாக பேசவேண்டுமென்று
கூறி அவரை தனது பிசல்பூர் இல்லத்தில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் .பின்னர் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவர் செய்த பாலியல் கொடுமை பற்றி அவரின் உயரதிகாரிகளிடம் புகாரளிக்க போவதாக கூறினார் .இதை கேட்ட அந்த போலீஸ் அதிகாரி அந்த பெண்ணிடம் அப்படி புகாரளித்தால் அந்த பெண்ணின் கணவரை ஏதாவது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .ஆனால் அந்த பெண் அந்த மிரட்டலை கண்டு பயப்படாமல் அவரின் உயரதிகாரிகளிடம் புகார் கூறினார் .பிறகு இந்த புகார் பற்றி அவரின் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த போலீஸ் அதிகாரி ராம்கோபால் சஸ்பண்ட் செய்யப்பட்டார் .இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் ராம்கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“அந்த போலீஸ் அதிகாரி அடிக்கடி போன் பண்ணி அதுக்கு கூப்பிடுறார்” -புகாரளிக்க போன பெண்ணின் நிலை.