“இந்த வேலைய பண்ணவா உங்களுக்கு துப்பாக்கி கொடுத்தாங்க ” – போலீசுக்கு நேர்ந்த விபரீதம்.

 

“இந்த வேலைய பண்ணவா உங்களுக்கு துப்பாக்கி கொடுத்தாங்க ” –  போலீசுக்கு நேர்ந்த விபரீதம்.

காதலில் விழுந்த ஒரு போலீஸ்க்காரர், துப்பாக்கியால் தன்னுடைய போலீஸ் காதலியை சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்ட  சம்பவம் நடந்துள்ளது.

“இந்த வேலைய பண்ணவா உங்களுக்கு துப்பாக்கி கொடுத்தாங்க ” –  போலீசுக்கு நேர்ந்த விபரீதம்.

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் கஜ்ராலா பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் மேகா சவுத்ரியும், ஆண்  கான்ஸ்டபிள் மனோஜ் துல் என்பவரும் பணியாற்றினார்கள் .கடந்த 2018ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள் .இருவரும் காவல் நிலையத்திலேயே காதலித்து வந்தனர் .அவர்களின் காதல் விவகாரம் அந்த காவல் நிலைய அதிகாரிகள் அனைவருக்குமே தெரியும் .கஜ்ரவுலாவில் உள்ள அவந்திகா நகர் காலனியில் சவுத்ரி ஒரு வாடகை விடுதியில் வசித்து வந்தார்.அங்கு அடிக்கடி சென்ற துல் அவரோடு அங்குதான் காதல் புரிவார் ..இருவரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்குள் திடீரென மோதல் உருவானது .

அதன் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டார்கள் .இதனால் கடந்த ஞாயிற்று கிழமையன்று துல் மீண்டும் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து கொண்டு அந்த பெண் போலீஸ் காதலி வசிக்கும் வீட்டிற்குள் சென்றார் .அப்போது இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது .அந்த வாக்குவாதம் முற்றிய போது திடீரென துல் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அந்த பெண் போலீஸ் காதலி சௌத்திரியை சுட்டு கொன்றார் .பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு கொண்டு அங்கேயே மயக்கத்தில் கிடந்தார் .பிறகு துப்பாக்கி சத்தம் கேட்ட பக்கத்து வீட்டு பெண்ணொருவர் அங்கே இருவரும் குண்டு பாய்ந்த நிலையில் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தந்தார் .விரைந்து வந்த போலீசார் அந்த இருவரையும் அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள் ,அங்கு அந்த பெண் போலீஸ்  இறந்தார் .ஆனால் துல்  ஆபத்தான நிலையில் உள்ளார்.இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

“இந்த வேலைய பண்ணவா உங்களுக்கு துப்பாக்கி கொடுத்தாங்க ” –  போலீசுக்கு நேர்ந்த விபரீதம்.