தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விபத்தில் மரணம்!
சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், காவலர்களும் துப்புரவு பணியாளர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும் அவர்களின் பணிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும் மருத்துவர்களும் கொரோனா பாதிப்பு மட்டும் இல்லாமல் விபத்திலும் அதிகமாக உயிரிழப்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் பிரதீஷ், இன்று விருதுநகர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.