தஞ்சை அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவலர் கைது!

 

தஞ்சை அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவலர் கைது!

தஞ்சை

தஞ்சை அருகே காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற, சக காவலர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை அய்யம்பேட்டை காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களாக ஆயுதப் படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டு வந்தார். பணி முடிந்ததும், இரவில் அவர் காவல் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில், அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் முருகானந்தம் என்பவர், பெண் காவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலர், அறையில் இருந்து அலறி அடித்து வெளியே ஓடினார்.

தஞ்சை அருகே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவலர் கைது!

தொடர்ந்து, இது தொடர்பாக அவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முருகானந்தம், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.

இதனை அடுத்து, காவலர் முருகானந்தத்தை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய காவலர் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை மாவட்ட எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டார்.