“வேலை கொடுக்கிறேன்னு இளம் பெண்களா பார்த்து கூட்டி போய் …”-கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுமிகள் .

 

“வேலை கொடுக்கிறேன்னு இளம் பெண்களா பார்த்து கூட்டி போய் …”-கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுமிகள் .


ஒரு கிராமத்திற்கு வந்த கடத்தல் கும்பல் 11 இளம் பெண்களை கடத்தியதால் அவர்களிடமிருந்து 11 பெண்களை போலீசார் மீட்டார்கள்

“வேலை கொடுக்கிறேன்னு இளம் பெண்களா பார்த்து கூட்டி போய் …”-கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுமிகள் .


அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் ஜமுனா கிராமத்தில் ஒரு கடத்தல் கும்பல் கடந்த வாரம் டிப்டாப்பாக வந்தது இறங்கியது .அந்த கூட்டத்தினர் அந்த ஊரின் ஏழைகளிடம் தங்களோடு வந்தால் அதிக சம்பளத்துடன் தங்கும் இடத்துடன் வேலை கொடுப்போமென்று கூறினார்கள் .
அதனால் அந்த கூட்டத்தின் பேச்சில் அந்த ஊரை சேர்ந்த பல பெண்கள் கவரப்பட்டனர் .அதன் பேரில் அவர்களோடு 4 சிறுமிகள் மற்றும் 7 பெண்கள் அவர்கள் வேலை கொடுப்பதை நம்பி சென்றார்கள் .இதில் பல பெண்கள் தங்களில் கணவரின் பேச்சையும் மீறி சென்றார்கள் .பல பெண்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கும் வேலையையும் விட்டு விட்டு சென்றார்கள் .மேலும் அஸ்ஸாமின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்களும் அந்த கூட்டத்தின் வலையில் வீழ்ந்தார்கள் .இந்த பெண்கள் கடத்தல் பற்றி அந்த ஊரை சேர்ந்த சிலர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள் ,அதனால் கடந்த திங்கள் கிழமையன்று போலீசார் அதிரடி நடவடிக்கையெடுத்து அந்த கூட்டத்தினர் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தார்கள் .அப்போது அந்த கூட்டத்தின் நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள் .அவர்களிடமிருந்த நான்கு சிறுமிகள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் பதினோரு பெண்களை போலீசார் மீட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் .மேலும் போலீசார் அந்த கடத்தல் கும்பலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மேலும் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் .அவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் .மேலும் இந்த கடத்தல் கும்பல் அஸ்ஸாமின் வேறு பகுதிகளில் இது போல கடத்தலில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்து வருகிறார்கள் .

“வேலை கொடுக்கிறேன்னு இளம் பெண்களா பார்த்து கூட்டி போய் …”-கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுமிகள் .
“வேலை கொடுக்கிறேன்னு இளம் பெண்களா பார்த்து கூட்டி போய் …”-கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுமிகள் .