தொடரும் அடாவடி: புதுக்கோட்டையில் ஓட்டுநரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!

 

தொடரும் அடாவடி: புதுக்கோட்டையில் ஓட்டுநரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரு வாரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு காவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தொடரும் அடாவடி: புதுக்கோட்டையில் ஓட்டுநரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த காவலர் ஸ்டாலின் விஜயகுமார் வாகனம் மீது என்பவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் வாகனம் ரிவர்ஸ் எடுக்கும்போது தெரியாமல் மோதி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஸ்டாலின் விஜயகுமார் வாகன ஓட்டுநர் சதீஷை சரமாரியாக அடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்துஇப்பிரச்சனை குறித்து கேள்விப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஓட்டுனரை தாக்தாகிய இலுப்பூர் காவல் காவலர் ஸ்டாலின் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.