நெற்றியில் பொட்டு வைத்தால் சுகப்பிரசவமாகுமா?

 

நெற்றியில் பொட்டு வைத்தால் சுகப்பிரசவமாகுமா?

நெற்றி… `ஒற்றைப்புள்ளியில் ஓர் அழகான கவிதை’ என்று நெற்றியில் இடப்படும் பொட்டினை குறித்து எழுதப்பட்ட கவிதை இது. நெற்றி உடல்பகுதியில் வெளியே தெரியும் ஓர் உறுப்பு. நெற்றியில் இரண்டு புருவங்களின் இடையே இருக்கும் குறிப்பிட்ட அந்தப் பகுதி உயிர் ஓட்டத்தைத் தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

நெற்றியில் பொட்டு வைத்தால் சுகப்பிரசவமாகுமா?
நெற்றி, வகிடு:
வர்ம மருத்துவத்தில் நெற்றியின் நடுவே இரு புருவங்களின் மத்தியிலிருந்து ஒரு நெல் அளவுக்கு கீழாக உள்ள இடத்தை திலர்த வர்மம் என்பார்கள். அந்த இடத்தைத் தொட்டு தூண்டுவதால் மனம் அமைதியடைவதுடன் மன இறுக்கம் விலகும். தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், நினைவுத்திறன் குறைதல் என பல்வேறு பாதிப்புகள் சரியாகும். அந்த அடிப்படையில்தான் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் கொடுத்து பிரச்சினைகளைச் சரி செய்கிறார்கள் வர்ம மருத்துவர்கள்.

நெற்றிப்பகுதியில் குறிப்பிட்ட அந்த இடத்திலோ அல்லது சற்று உயரமாக உள்ள இடத்திலோ பெண்கள் பொட்டு வைப்பார்கள். அதேபோல் தலைமுடி வகிடு எடுக்கும் இடத்திலும் பொட்டு வைப்பார்கள். இந்த இடங்களில் பொட்டு வைப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை நம் முன்னோர் அறிந்ததால் அதை காலகாலமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

நெற்றியில் பொட்டு வைத்தால் சுகப்பிரசவமாகுமா?
பொட்டு:
திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் தினமும் பொட்டு வைப்பதால் அவர்களது அடிவயிற்றிலிருந்து பாலியல் சுரப்பி நன்றாகத் தூண்டப்பட்டு கர்ப்பப்பை வலுப்பெறும். இப்படி தொடர்ந்து தொடுவதால் கர்ப்பகால சிக்கல்கள் வராமலிருப்பதுடன் சுகப்பிரசவம் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அந்த அடிப்படையில்தான் கணவனை இழந்த பெண்களை பொட்டு வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆறாவது சக்கரம் புருவங்களின் மத்தியில் அமைந்திருக்கிறது. இந்த சக்கரத்தைத் தூண்டுவதால் மூளை, நரம்பு மண்டலம், காது, மூக்கு, இடது கண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி புத்திக்கூர்மையையும் ஆன்ம சக்தியையும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

நெற்றியில் பொட்டு வைத்தால் சுகப்பிரசவமாகுமா?முத்தம்:
அன்பின் மிகுதியாலோ அல்லது பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும்போதோ நெற்றியில் முத்தமிடுவதைப் பார்க்கலாம். உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் முத்தமிடுவதால் உடலில் ஒருவித உணர்ச்சி மேலிடும். பெரும்பாலும் காதலன், காதலி இப்படி நெற்றியில் முத்தமிட்டு அன்பைப் பரிமாறுவது வழக்கம்.