17 வயது சிறுமி கர்ப்பம்… கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

 

17 வயது சிறுமி கர்ப்பம்… கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

தஞ்சாவூர்

தஞ்சை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமடைய செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குமிழக்குடியை சேர்ந்தவர் எழிலரசன். கட்டிட தொழிலாளி. இவர் சேர்வராயன் குடிகாட்டை சேர்ந்த 17 வயது உறவுக்கார சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

17 வயது சிறுமி கர்ப்பம்… கட்டிட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு!

இதனை தொடர்ந்து, எழிலரசன் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. மேலும், அவரிடம் விசாரித்தபோது 17 வயதே ஆவது தெரிய வந்ததால், இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், பாபநாசம் மகளிர் போலீசார் எழிலரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.