தீபாவளி வாழ்த்து சொல்ல நேரலையில் வந்த பிரதமர் மோடி!

 

தீபாவளி வாழ்த்து சொல்ல நேரலையில் வந்த பிரதமர் மோடி!

கொரோனா காலத்தில் இதுவரை பிரதமர் மோடி 6 முறை உரையாற்றியுள்ளார். இந்நிலையில் 7 ஆவது முறையாக இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த முறை என்ன ஸ்பெஷல் என்றால் பதிவு செய்யப்பட்ட உரையாக இல்லாமல் நேரலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசினார்.

Image

டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “நோய், நெருப்பு போன்றவற்றை எப்போதுமே எளிதானதாக கருதக்கூடாது. தசரா, ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. பாதுகாப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள். தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதல் ஆகியவற்றை கடைபிடித்து பண்டிகைகளை கொண்டாடுங்கள். பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவுக்கான தடுப்பூசி வரும்வரை நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.