கடந்த காலங்களில் நிகழ்ந்தவை தவறு என்பதை இந்துக்களிடம் மோடி சொல்ல வேண்டும்.. ஹூசைன் தல்வாய்

 

கடந்த காலங்களில் நிகழ்ந்தவை தவறு என்பதை இந்துக்களிடம் மோடி சொல்ல வேண்டும்.. ஹூசைன் தல்வாய்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், இன்று உலகம் அசாரண சவால்களை எதிர்த்து போராடுகிறது. இந்த சவால்களுக்கு புத்தரின் கொள்கைளிலிருந்து தீர்வு கிடைக்கலாம். புத்தரின் கொள்கைள் கடந்த காலத்துக்கும் பொருந்தும், நிகழ்காலத்துக்கும் பொருந்தும், எதிர்காலத்துக்கும் பொருந்தும் என தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹூசைன் தல்வாய் மோடியின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும் தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த காலங்களில் நிகழ்ந்தவை தவறு என்பதை இந்துக்களிடம் மோடி சொல்ல வேண்டும்.. ஹூசைன் தல்வாய்

முன்பு புத்த மதத்தினர் அதிகம் பேர் இருந்தனர். அவர்கள் மிகவும் நல்ல பணிகளை செய்தனர். ஆனால் ஆதி சங்கராச்சாரியார் காலத்தில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதனால்தான் அவர்கள் சீனா, ஜப்பான் மற்றும் இதர பகுதிகளுக்கு சென்றனர். கடந்த காலத்தில் நடந்தவை அனைத்தும் தவறு என்றும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் இந்துக்களிடம் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் நிகழ்ந்தவை தவறு என்பதை இந்துக்களிடம் மோடி சொல்ல வேண்டும்.. ஹூசைன் தல்வாய்

மக்களை பிளவுப்படுத்தாமல், உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். லடாக் மக்கள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும். அந்த பிராந்தியத்தில் சீன வீரர்கள் இருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும், சீனாவுக்கு பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.