சுதந்திர தின விழாவுக்கு வந்துடுங்க! ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

 

சுதந்திர தின விழாவுக்கு வந்துடுங்க! ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரரம்வீராங்கனைகளை நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தின விழாவுக்கு வந்துடுங்க! ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர கொண்டாட்டம் டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் எளிமையான முறையில் டெல்லி செங்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கோலாகல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விழாவிற்கு மூத்த அரசியல் தலைவர்கள், முப்படை அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைமை அதிகாரிகள் என பலரை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று இருக்கும் 127 போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையில் சுதந்திர தினத்தில் கொடியேற்றி உரையாற்றிய பின்பு பிரதமர் மோடி ஒலிம்பிக் வீரர்களுடன் நேரில் கலந்துரையாடவுள்ளார். 75வது சுதந்திர தினத்தில் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர்.