`பின்வாங்கியது தமிழக அரசு; பழைய பாடத்திட்டமே தொடரும்!’- பிளஸ் 1, +2 மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

 

`பின்வாங்கியது தமிழக அரசு; பழைய பாடத்திட்டமே தொடரும்!’- பிளஸ் 1, +2 மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால் பிளஸ் 1, பிளஸ் 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

`பின்வாங்கியது தமிழக அரசு; பழைய பாடத்திட்டமே தொடரும்!’- பிளஸ் 1, +2 மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

2020-2021ம் கல்யாண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 12-ம் வகுப்பு  பாடத்திட்டங்களை தமிழக அரசு திடீரென மாற்றியது.  இதற்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பால் பழைய பாடத்திட்டமே தொடரும் என்று அரசு அரசு திடீரென அறிவித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி!” என்று கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர் கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் வேலை வாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுதிப்பினையோ தெரிவு செய்து கொள்ளும் வகையில் 2020-2021ம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கு இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

`பின்வாங்கியது தமிழக அரசு; பழைய பாடத்திட்டமே தொடரும்!’- பிளஸ் 1, +2 மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர், மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நான்கு பாடத் தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பல்வேறு நாளிதழ்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக தெரிவித்து மேற்காணும் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து 2020-2021ம் கல்வி ஆண்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்டதிட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும், புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை ரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

`பின்வாங்கியது தமிழக அரசு; பழைய பாடத்திட்டமே தொடரும்!’- பிளஸ் 1, +2 மாணவர்களுக்கு இனிப்பான செய்தி

மேற்காணும் சூழ்நிலையில் பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று மேல்நிலை கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பதால் மாணவர்களின் நலன் கருதி மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையினை ரத்து செய்தும், 2020-2021ம் கல்வியாண்டிலிருந்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு ஆணையிடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.