பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

 

பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

மணப்பாறை

மணப்பாறை அருகே 12ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ஆணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்துலெட்சுமி(17). இவர் மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். முத்துலெட்சுமி சரிவர படிக்காததால், அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மாயமாகினார்.

பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

பல்வேறு இடங்களில் தேடியும் முத்துலெட்சுமி கிடைக்காததால், இதுகுறித்து அவரது உறவினர்கள், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆனாம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மாணவி குதித்ததாக, மணப்பாறை தீயணைப்புத் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றல் தேடியபோது, முத்துலெட்சுமியை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், நேற்று அதே கிணற்றில் மாணவி சடலமாக மிதந்ததார். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.