பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை… வலிப்பு நோயால் விபரீத முடிவு…

 

பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை…  வலிப்பு நோயால் விபரீத முடிவு…

தேனி

தேனி அருகே வலிப்பு நோய் காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கூடலூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் சந்தியா(16). இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சந்தியாவிற்கு சிறு வயது முதலே வலிப்பு நோய் இருந்துள்ளது.

இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால், அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை…  வலிப்பு நோயால் விபரீத முடிவு…

வீட்டில் மயங்கி கிடந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தியா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.