அரியலூர் அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை!

 

அரியலூர் அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை!

அரியலூர்

அரியலூர் அருகே பெற்றேர் வேறு பள்ளியில் சேர்க்க முயன்றதால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். விவசாயி. இவரது மகள் சந்தியா(17). இவர் கழுமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, பரணம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில், சந்தியாவை அவரது பெற்றோர், உடையார்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி சந்தியா, கடந்த 6ஆம் தேதி வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அரியலூர் அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை!

மயங்கிய நிலையில் கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.