பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை

கோவை தொண்டாமுத்தூரில் பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். விடுமுறை காரணமாக அவர் ஆலந்துறையில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே சிறுமி, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் கடையில் விசாரித்தபோது அவர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து, அவர்கள் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், அவரை கார்த்திக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்கள் பன்னிமடையில் பதுங்கியிருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று இருவரையும் ஆலந்துறை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, கார்த்தி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் திருமணம் செய்துகொண்டதும், மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, கார்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.