ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி! தானம் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ

 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி! தானம் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இந்தியாவிலேயே இரண்டாவதாக பிளாஸ்மா வங்கி சென்னையில் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 7 பேரிடமிருந்து பிளாஸ்மா செல்கள் பிரித்து எடுக்க முடியும். ஒருவருக்கு பிளாஸ்மா செல்கள் எடுக்க 40 நிமிடம் வரை நேரம் எடுக்கும். இன்று மூவர் பிளாஸ்மா செல்களை தானம் வழங்க உள்ளனர். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் முதலாவதாக பிளாஸ்மா தானம் செய்தார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்ட பிளாஸ்மா வங்கி! தானம் கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தானம் செய்வது சிறந்த மாநிலம் தமிழ்நாடு அனைவரும் பிளாஸ்மா கொடுக்க முன்வரவேண்டும். மதுரை, கோவை, சேலம், நெல்லை பிளாஸ்மா வங்கி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.