ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் : பாமக நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

 

ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் : பாமக  நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் : பாமக  நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ம.க.ஸ்டாலின் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கொலை திட்டமிட்டவர்கள் மற்றும் கொலை செய்ய நிதியுதவி செய்த பாமக மாநில நிர்வாகி வெங்கட்ராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ம.க.ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் : பாமக  நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சி ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள் என்பது தான் நாம் பெருமைப்படும் விஷயமாகும். அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்க தொடங்கியுள்ளது. இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராக பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்று ராமதாஸ் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது