குழந்தை இல்லாததால் கொடுமைப் படுத்திய கணவன்… தூக்கில் தொங்கிய மனைவி!

 

குழந்தை இல்லாததால் கொடுமைப் படுத்திய கணவன்… தூக்கில் தொங்கிய மனைவி!

இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்து வருவதால் தற்கொலை செய்யப் போவதாக வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது பலரை உலுக்கியுள்ளது. வியாழக்கிழமை இரவு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சிறிது நேரத்திலேயே அந்த பெண் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லாவண்யா லஹரி மற்றும் வெங்கடேஸ்வரலு என்ற தம்பதிகள் தெலுங்கானாவில் ஷம்ஷபாத் பகுதியில் வசித்து வந்துள்ளனர். வெங்கடேஸ்வரலு பைலட் ஆக வேலை செய்து வருகிறார். லாவண்யா ஒருவருடத்திற்கு முன்பு வரை ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குழந்தை இல்லாததால் கொடுமைப் படுத்திய கணவன்… தூக்கில் தொங்கிய மனைவி!

திருமணத்திற்கு பிறகு தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும் லாவண்யா குற்றம் சாட்டியுள்ளார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் தன்னை மிகவும் துன்புறுத்தியதாக அந்தப் பெண் புகார் அளித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும் தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாக லாவண்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

லாவண்யா தற்கொலைக்கு முந்தைய தனது வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவுடன் அதை பார்த்த அவரது உறவினர்கள் லாவண்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். லாவண்யாவின் பெற்றோர் உடனடியாக வெங்கடேஸ்வரலுவை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் வீடியோவை வைத்து இது தற்கொலை அல்ல என முடிவுசெய்து வெங்கடேஸ்வரன் அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.