கோழிக்கோடு விமான விபத்தின் கோர முகம் -மகனை இழந்த தாய் ,கணவனை இழந்த கர்ப்பிணி -அந்தரத்தில் பறக்கும் விமானிகளின் அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை

 

கோழிக்கோடு விமான விபத்தின் கோர முகம்  -மகனை இழந்த தாய் ,கணவனை இழந்த கர்ப்பிணி -அந்தரத்தில் பறக்கும் விமானிகளின் அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை

கோழிக்கோடு விமான விபத்தில் பலியான இரு விமானிகள் 59 வயதான சாத்தே மற்றும் 32 வயதான குமார் ஆகியோர் .இதில் சாத்தேவின் தாயார் அவர்களது மற்றொரு மகன் இராணுவத்தில் கேப்டனாக இருந்த விகாசை , 1980 களின் முற்பகுதியில் ஒரு விபத்தில் பறி கொடுத்தார் .இந்த விபத்து நடப்பதற்கு முதல்நாள் சாத்தே ,தன்னுடைய 83 வயது தாயார் லீலாவுக்கு போன் செய்து கொரானா நேரத்தில் வெளியே போகாதே என்று எச்சரித்துள்ளார் .அவரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் .கோழிக்கோடு விமான விபத்தின் கோர முகம்  -மகனை இழந்த தாய் ,கணவனை இழந்த கர்ப்பிணி -அந்தரத்தில் பறக்கும் விமானிகளின் அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை
ஐ.ஐ.டி-பம்பாயின் முன்னாள் மாணவரான சாத்தேவுக்கு அவரது மனைவி சுஷ்மாவுடன் மகன்கள் சாந்தனு மற்றும் தனஞ்சய் ஆகியோரும் உள்ளனர். அவரது உடலைப் பெற்றுக்கொள்ள அவரின் குடும்பம் கோழிக்கோட்டில் உள்ளது.
இந்த விபத்தில் இறந்த இன்னொரு இளம் விமானி குமாரின் நிலை இன்னும் பரிதாபக்குறியது .அவருக்கு சென்ற ஆண்டுதான் திருமணம் ஆகியது .இப்போது அவரின் மனைவி மேகா நிறைமாத கர்ப்பிணி ..அவருக்கு இன்னும் 15 நாளில் எப்போதைக்கு வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம். அவருக்கு இன்னும் கணவர் குமார் இறந்த விஷயம் தெரிவிக்கப்படவில்லை .
குமாருக்கு பெற்றோர் மற்றும் மனைவியைத் தவிர, இரண்டு தம்பிகள் மற்றும் ஒரு சகோதரி.அவர்களோடு கோழிக்கோட்டில் உள்ள ஏர் இந்தியா தளத்தில் வசித்து வந்தார் .குமாரின் மனைவி மேகா கர்ப்பம் காரணமாக ஜூன் மாதம் தனது அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் குமார் ஆகஸ்ட் 21 முதல் 15 நாள் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.ஆனால் விதி வேறு விதமாக அவரின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது .

கோழிக்கோடு விமான விபத்தின் கோர முகம்  -மகனை இழந்த தாய் ,கணவனை இழந்த கர்ப்பிணி -அந்தரத்தில் பறக்கும் விமானிகளின் அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை