எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 3 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை தொடக்கம்

 

எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 3 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை தொடக்கம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடந்த முதற்கட்ட பரிசோதனை நடந்தது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 2 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 3 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை தொடக்கம்

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது. இரண்டு கட்ட பரிசோதனைகளிலும் வெற்றி கண்டதால் நாளை முதல் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கவிருப்பதாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.