கொரோனா தடுப்பூசி : எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை துவங்கியது!

 

கொரோனா தடுப்பூசி : எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை துவங்கியது!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி : எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை துவங்கியது!

இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டிருந்தது. அதன் படி கடந்த மாதம் 23 ஆம் தேதி காட்டாங்குளத்தூர் SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பூசி கோவாக்சினை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. முதற்கட்டமாக ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ள 2 தன்னார்வலர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

கொரோனா தடுப்பூசி : எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை துவங்கியது!

இந்நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இன்று 2 ஆம் கட்ட கோவாக்சின் பரிசோதனை துவங்கியுள்ளது. ஜூலை 23-இல் தடுப்பூசி போடப்பட்ட இரண்டு தன்னார்வலர்களும் ஆரோக்கியமாக இருப்பதால் இரண்டாம் கட்ட சோதனை அரம்பமாகியுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டு 14 நாள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.