“தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு தடை?”

 

“தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு தடை?”

தமிழ்நாட்டில் தேவேந்திர குலத்தார், குடும்பர், பள்ளர், கடையர், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், ஏழு பிரிவினரையும் தேவேந்திர குல வேளாளர் என கருத வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஜூன் 1ம் தேதி தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்தது.

“தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு தடை?”

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உலக வேளாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், “ஏழு பிரிவினரையும், தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அளித்த மனுவைப் பரிசீலிக்காமல் எங்கள் ஆட்சேபங்களை கேட்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு தடை?”

இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தற்போது தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளையும், வேளாளர் என வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.