“எடப்பாடி அதுக்கு சரிபட்டு வர மாட்டாரு… ஸ்டாலின்ட்ட மட்டும் தான் அது இருக்கு” – பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு பேச்சு!

 

“எடப்பாடி அதுக்கு சரிபட்டு வர மாட்டாரு… ஸ்டாலின்ட்ட மட்டும் தான் அது இருக்கு” – பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு பேச்சு!

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஸ்டாலினை அனைவரும் வாழ்த்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்யப்போகிறார் என்பதே உண்மை.

“எடப்பாடி அதுக்கு சரிபட்டு வர மாட்டாரு… ஸ்டாலின்ட்ட மட்டும் தான் அது இருக்கு” – பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு பேச்சு!


ஆட்சி மாற்றம் மட்டுமே தேர்தலின் நோக்கம் என்பது கிடையாது. இந்தத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வரலாற்றை எழுதப்போகிற தேர்தல். ஆறு ஆண்டுகளில் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட அநீதிகள், மாநிலத்திற்குக் கிடைக்கவேண்டிய நிதிப் பங்கீடு பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டிய தைரியம் ஆறு ஆண்டுகளில் இபிஎஸ் ஓபிஎஸ் இடம் இருந்ததா? தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வருவாய் பங்குகளை, திட்டங்களைக் கேட்க கூடிய தைரியம் ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது” என்றார்.