பெருந்துறை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

 

பெருந்துறை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திர எண் குளறுபடி காரணமாக வாக்கு எண்ணக்கை நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் பதிவான வாக்குகள், சித்தோடு தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. 14 -வது சுற்று முடிந்த நிலையில், அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கைக்காக கொண்டு வந்த வாக்கு எந்திரத்தின் எண்ணில் குளறுபடி இருப்பது தெரியவந்தது.

பெருந்துறை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

இதனையடுத்து, திமுக கூட்டணியின் கொ.ம.தே.க சார்பில் போட்டியிட்ட பாலு மற்றும் சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோரும், அவர்களது முகவர்களும் இதுகுறித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் புகார் அனுப்பப்பட்டது. மேலும், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது.