“சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” : மு.க. ஸ்டாலின்

 

“சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” : மு.க. ஸ்டாலின்

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

“சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” : மு.க. ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு தினத்தையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்.பி. ஆ. ராசா, ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் உள்ளிட்டோரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

“சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” : மு.க. ஸ்டாலின்

அத்துடன் இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்! சமூக அடிமைத்தனம் – ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை – பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! #Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் பெருமைகளை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.