பெரியகுளம்- தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
Sep 4, 2020, 17:51 IST1599222103000
பெரியகுளம்
தேனி மாவட்டம் , பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களது வருகையை முன்னிட்டு, மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில், கோயில்களில் வழிபாடு நடத்த அரசு
அனுமதியளித்ததைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் தமிழக துணை முதல்வரும், தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் ,சாமி தரிசனம் மேற்கொண்டனர்.