மீண்டும் கொரோனா பிடிக்குள் பெரம்பலூர்! புதிதாக இன்று 2 பேருக்கு தொற்று

 

மீண்டும் கொரோனா பிடிக்குள் பெரம்பலூர்! புதிதாக இன்று 2 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாருமே இல்லை என நேற்று செய்திகள் வெளியானது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2228 நபர்களுள் 2175 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் சிகிச்சையில் இருக்கும் 32 பேரில் 30 பேர் பெரம்பலூரை பூர்வீகமாக கொண்டவர்கள். மீதமுள்ள இருவர் வெளியூரிலிருந்து வந்து பெரம்பலூரில் தங்கியிருந்தவர்கள். அந்த இரண்டு பேரும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மீண்டும் கொரோனா பிடிக்குள் பெரம்பலூர்! புதிதாக இன்று 2 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 51099 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறைவான உயிரிழப்புகள் நிகழ்ந்த மாவட்டமாகவும் பெரம்பலூர் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று புதிதாக உறுதிசெய்யப்படாத மாவட்டமாக இருந்த பெரம்பலூரில் இன்று மீண்டும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.