சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மக்கள்!

 

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மக்கள்!

சித்தூர் மாவட்டம் பி.கொத்த கோட்டாவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கட்டிட மேஸ்திரியை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மக்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பி.கொத்த கோட்டாவில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அனில் (20) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கழுத்து நெரித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் பி.கொத்த கோட்டா இந்திரம்மா காலனியில் உள்ள ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது சிறுமி அலறி அடித்து ஓடியுள்ளார். இதனை அடுத்து சிறுமிகளுக்கு பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட கட்டிட மேஸ்திரி அனிலை பிடித்த பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனிலை கைது செய்து காவல் நிலையத்திற்கு சென்றனர்.