“மக்கள் எச்சரிக்கையுடன் பொங்கல் கொண்டாட வேண்டும்” – நடிகர் விவேக்

 

“மக்கள் எச்சரிக்கையுடன் பொங்கல் கொண்டாட வேண்டும்” – நடிகர் விவேக்

சென்னை

தமிழக மக்கள் எச்சரிக்கையோடும், ஜாக்கிரதையோடும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டார்.

ஆவடி நகராட்சி சார்பில் பருத்திப்பட்டு ஏரி பூங்கா பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், அனைத்து கிராமங்களிலும் உள்ள இளைஞர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை தாமாக முன்வந்து பாதுகாத்து வேண்டும் எனவும், நீர் தட்டுப்பாடு வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

“மக்கள் எச்சரிக்கையுடன் பொங்கல் கொண்டாட வேண்டும்” – நடிகர் விவேக்

தொடர்ந்து, தமிழக மக்கள் எச்சரிக்கையோடும், ஜாக்கிரதையோடும் இந்த பொங்கலை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்ட நடிகர் விவேக், கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும் கூட நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என் தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு என்று இருக்கும் ஒரே முக்கியமான பண்டிகை பொங்கல் தான் என்றும், அதனை மக்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் கொண்டாட வேண்டும் என்றும் கூறினார்