ஜாமீனில் ஜாலியா வந்தவரை கொலை செய்த ஊர் மக்கள்-பலாத்கார குற்றவாளி மீது தாக்கு..

 

ஜாமீனில் ஜாலியா வந்தவரை கொலை செய்த ஊர் மக்கள்-பலாத்கார குற்றவாளி மீது தாக்கு..

பலாத்கார வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நபரை ஒரு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்த சம்பவம ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது
ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில் ஜோகிமுண்டா கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி வினீத் என்ற வாலிபர் ஏழு மாதத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் .கடந்த செவ்வாயன்று அவர் வீட்டினில் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த கிராமத்தினை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அவரின் வீட்டை நள்ளிரவில் தாக்கினார்கள் .பிறகு வீட்டை தீவைத்து கொளுத்தி விட்டு அவரை வெளியே ஒரு தனிமையான இடத்திற்கு இழுத்து சென்று உருட்டுக்கட்டையாலடித்து கொலை செய்துள்ளார்கள்.

ஜாமீனில் ஜாலியா வந்தவரை கொலை செய்த ஊர் மக்கள்-பலாத்கார குற்றவாளி மீது தாக்கு..
இதனால் அவரின் தந்தை மகன் கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று போலீசில் புகார் தந்தார் .போலீசார் இது பற்றி விசாரணை செய்தபோது ,பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் தன்னுடைய கூட்டாளிகளை அழைத்து வந்து வினீத்தை கொலை செய்த விவரம் தெரிய வந்துள்ளது .இதனால் போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்