“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

 

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்பைவேர் நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேர் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் செல்போன் 2019ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் உளவு பார்க்கப்பட்டுள்ளது.

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

அதேபோல தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர், மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் செல்போன்கள் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டு கேட்பினால் யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்தால், அது மத்திய அரசை நோக்கி கைகாட்டுகிறது. பெகாசஸை உருவாக்கிய என்எஸ்ஓ நிறுவனத்துக்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அரசுகளே வாடிக்கையாளர்களாக இருப்பதால், இந்தியாவில் ஒட்டு கேட்டது மத்திய அரசு தான் என எதிர்க்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள்.

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த விவாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதேபோல அமளியில் ஈடுபடுபவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர் இச்சூழலில் நாட்டிலேயே முதன்முறையாக இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றை மேற்கு வங்க அரசு உருவாக்கியுள்ளது.

Media functioning as wing of govt., says N. Ram - The Hindu

அதேபோல பத்திரிகையாளர்கள் இந்து ராம், சசிகுமார், சிபிஎம் எம்பி ஜான், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்ட 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட உத்தரவிடக் கோரி அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா கண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சரமாரி கேள்விகளை முன்வைத்தார்.

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

“ஊடகங்களில் வந்த இந்தச் செய்திகள் அத்தனையும் உண்மையானால் இந்த விவகாரம் தீவிமானது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தொடரப்பட்டிருக்கும் வழக்கில் அத்தனையும் ஊடகங்கள் சொல்வதாகத்தான் உள்ளது. ஆதாரமாக வேறு எந்த ஆவணமும் இல்லை. ஆதாரங்களும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாருமே ஏன் குற்ற வழக்கு தொடரவில்லை. உண்மை வெளிவர வேண்டும்.” என்றார். மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.