கொரோனா வார்டில் நோயாளி தற்கொலை!

 

கொரோனா வார்டில் நோயாளி தற்கொலை!

கொரோனா வார்டில் நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வார்டில் நோயாளி தற்கொலை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 10,916 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 44 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,157ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,14,119ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வார்டில் நோயாளி தற்கொலை!

இந்நிலையில் சென்னை அடுத்த கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரனோ உறுதியாக சிகிச்சை பெற்றுவந்த ரங்கன் என்பவர் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரங்கன் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.