தனியார் காப்பகத்தில் மத போதகர் கொலை… மனநலம் பாதித்த இளைஞர் கைது…

 

தனியார் காப்பகத்தில் மத போதகர் கொலை… மனநலம் பாதித்த இளைஞர் கைது…

திருச்சி

திருச்சி அருகே காப்பகத்தில் மத போதகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் தனியார் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்து கிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காப்பகத்தில் தஞ்சை மாவட்டம் மனையேறிபட்டியை சேர்ந்த விக்டர் ஞான ஆசிர்வாதம் என்பவர் சமையலாக பணிபுரிந்து வந்தார். மேலும், அவர் கிறிஸ்தவ மதபோதகராகவும் இருந்தார்.

தனியார் காப்பகத்தில் மத போதகர் கொலை… மனநலம் பாதித்த இளைஞர் கைது…

இந்த நிலையில், நேற்று காலை விக்டர் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த கருரை சேர்ந்த அசோக்(22) என்பவரை தோசை கரண்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசோக், தண்ணீர் டம்ளரை எடுத்து விக்டரின் மீது வீசினார். இதில், காயமடைந்த விக்டருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இதனை கவனிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காப்பக நிர்வாகிகள் தகவலின் பேரில் நவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதித்த அசோக்கை கைதுசெய்தனர்.