“பெண் குழந்தைக்கு கொடுக்க பால் இல்லையே, அதனால…” ஒரு பெற்றோர் பண்ண வேலைய பாருங்க .

 

“பெண் குழந்தைக்கு கொடுக்க பால் இல்லையே, அதனால…” ஒரு பெற்றோர் பண்ண வேலைய பாருங்க .

தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் வறுமையில் வாடிய ஒரு பெற்றோர் அந்த குழந்தையை உறவினர் மூலம் விற்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

“பெண் குழந்தைக்கு கொடுக்க பால் இல்லையே, அதனால…” ஒரு பெற்றோர் பண்ண வேலைய பாருங்க .

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் விரார் வசாய் பகுதியில் ஒரு தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது .அந்த தம்பதியினர் மிகவும் வறுமையில் வாடினார்கள் .அதனால் அந்த குழந்தைக்கு பால்வாங்கி  கொடுக்க கூட பணமில்லமல் தவித்தனர் .அந்த வறுமை நிலையிலும் அந்த குழந்தையை எட்டு மாதம் வரை வளர்த்து விட்டார்கள் .ஆனால் அதற்கு மேல் அந்த குழந்தையை வளர்க்க வருமானமில்லாமல் தவித்த அவர்கள் அந்த குழந்தையை தங்களின் உறவினர்கள் சிலரிடம் கொடுத்து விற்க சொல்லிவிட்டார்கள் .

அதனால் அந்த குழந்தையை வாங்கிய அந்த உறவினர்கள் அந்த குழந்தையை அங்குள்ள ஒருவருக்கு 5000 ரூபாய்க்கு விற்க முயற்சி செய்துள்ளார்கள் .இந்த குழந்தையை இப்படி 5000ரூபாய்க்கு கூவி கூவி விற்பதை பற்றி அந்த பகுதி போலீசுக்கு தெரிய வந்துள்ளது .இதனால் அவர்கள் அந்த குழந்தையை விற்க முயல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தார்கள் .அதன் படி அந்த குழந்தையை விற்க முயன்ற அந்த மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கடந்த புதன் கிழமையன்று கைது செய்தார்கள் .பின்னர் அந்த குழந்தையை அவர்களிடமிருந்து மீட்ட போலீசார் , அந்த குழந்தையை அங்குள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்த்தார்கள் .இந்த வழக்கு பற்றி மேற்கொண்டு விசாரிக்க அந்த குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

“பெண் குழந்தைக்கு கொடுக்க பால் இல்லையே, அதனால…” ஒரு பெற்றோர் பண்ண வேலைய பாருங்க .