பிறந்த குழந்தை -இறந்த பெற்றோர் -கொரானா பண்ண கொடுமையை பாருங்க .

 

பிறந்த குழந்தை -இறந்த பெற்றோர் -கொரானா பண்ண கொடுமையை பாருங்க .

கொரோனாவுக்கு பெற்றோர் பலியானதால், பிறந்த பச்சிளம் குழந்தை அனாதை ஆன கொடுமை நடந்துள்ளது.

பிறந்த குழந்தை -இறந்த பெற்றோர் -கொரானா பண்ண கொடுமையை பாருங்க .

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா தொட்டேனஹள்ளி கிராமத்தில் 43 வயதான நஞ்சேகவுடா , தனது 32 வயதான மனைவி மமதாவுடன் வசித்து வந்தார்
இந்த தம்பதி சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியிலிருந்து நாகமங்களாவுக்கு குடிபெயர்ந்திருந்தனர். இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து,தற்போதுதான் மமதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், நஞ்சேகவுடாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு நடந்த பரிசோதனையில் , கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். நஞ்சேகவுடாவுக்கு கொரோனா இருந்ததால், மனைவி மமதாவுக்கும் வைரஸ் தொற்று பரவியது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மமதாவுக்கு கடந்த 11-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா பாதிப்பு அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்கு பிறகும் குறையாததால் அவரை வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற மமதாவுக்கு நேற்று முன்தினம் மாலைஉடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நஞ்சேகவுடா, மமதா தம்பதிக்கு தவமிருந்து ஒரு பெண் குழந்தை பிறந்தும்,அவர்களால் அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் கொரானா அவர்களை பலிகடா ஆக்கியது .இந்த சம்பவத்தால் அந்த குழந்தை இப்போது அனாதை ஆசிரமத்தில் வளர்கிறது .

பிறந்த குழந்தை -இறந்த பெற்றோர் -கொரானா பண்ண கொடுமையை பாருங்க .