கட்டாய கல்யாணம் செய்துவைத்த அப்பா… போக்சோ சட்டத்தில் சிக்கிய காதலன், கணவன்! – கன்னியாகுமரியில் பரபரப்பு

 

கட்டாய கல்யாணம் செய்துவைத்த அப்பா… போக்சோ சட்டத்தில் சிக்கிய காதலன், கணவன்! – கன்னியாகுமரியில் பரபரப்பு

காதலிப்பது தெரிந்து தன்னுடைய மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தந்தை, காதலன், கணவன் என அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி இருப்பது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் சுகன்யா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியில் சாலையோரத்தில் கடை வைத்திருந்த சுதீஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மாடசாமி, மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டினார். திடீரென்று திருமண ஏற்பாடுகளை செய்த அவர், புலியூர்குறிச்சியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கு தன்னுடைய மகளைத் திருமணம் செய்து வைத்தார்.

கட்டாய கல்யாணம் செய்துவைத்த அப்பா… போக்சோ சட்டத்தில் சிக்கிய காதலன், கணவன்! – கன்னியாகுமரியில் பரபரப்பு
திருமணம் ஆகிவிட்டதே என்ற நிம்மதியில் மாடசாமி இருந்துள்ளார். ஆனால், புகுந்த வீட்டுக்கு சென்ற சுகன்யா, செல்போனில் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். தாலி கட்டிய கணவனிடம் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எனவே, முதலிரவுக்கு எல்லாம் முயற்சி செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் விவேக் அதிர்ச்சியடைந்து மாடசாமியிடம் இது பற்றி கூறியுள்ளார். அதே நேரத்தில் தன்னை அழைத்து செல்லும்படி சுதீஷை அழைத்துள்ளார் சுகன்யா. சுதீஷ் அங்கு வரவே விவேக் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
சுதீசுடன் சுகன்யா செல்வதை தடுத்த விவேக் குடும்பத்தினர் இது குறித்து தக்கலை போலீசில் புகார் செய்துள்ளார். அவர்கள் சுகன்யாவை அழைத்து விசாரித்தபோது மண்டை காய்ந்து போனது. போலீசாரிடம் பேசிய சுகன்யா, “எனக்கு வயது 17தான் ஆகிறது. நான் சுதீஷை காதலிக்கிறேன். எனக்கும் அவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எங்கள் காதல் விவகாரம் தெரிந்ததால் என் அப்பா இந்த அவசர திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
விஷயம் விபரீதமாவதை உணர்ந்த போலீசார், சுகன்யாவை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு, 17 வயதே ஆன பெண்ணை திருமணம் செய்ததாக சுதீஷ், விவேக், திருமணத்துக்கு ஏற்பாடு செய்த மாடசாமி, விவேக்கின் பெற்றோர் என அனைவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். இதனால், மாடசாமியின் மனைவி, மற்றும் விவேக்கின் அப்பா, அம்மா தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவான அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.