தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் நூலகர் பாண்டுரங்கன் காலமானார்!

 

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் நூலகர் பாண்டுரங்கன் காலமானார்!

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளரும் மதுரை மாவட்ட முன்னாள் மைய நூலகருமான பாண்டுரங்கன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் நூலகர் பாண்டுரங்கன் காலமானார்!மதுரை மைய நூலகத்தில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாண்டுரங்கள். இவர் மதுரை நூலகத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு மாதமும் தமிழறிஞர்களை அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். இதன் மூலம் நூலகத்துக்கு வருபவர்கள், தமிழார்கள் மத்தியில் மரியாதைக்குரிய நபராக கருதப்படுகிறார். மேலும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொருளாளர் நூலகர் பாண்டுரங்கன் காலமானார்!மதுரை மாடக்குடத்தில் வசித்து வந்த பாண்டுரங்கனுக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. கடந்த 7ம் தேதி இவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவு வரவில்லை. அறிகுறிகளைப் பார்த்து கொரோனாவாக இருக்கலாம் என்று சந்தேகித்த மருத்துவர்கள் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்ற நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டுரங்கன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.