ஆதார் – பான் எண்ணை இணைக்க அவகாசம் : மத்திய அரசு அறிவிப்பு!!
Sep 18, 2021, 07:53 IST1631931795000
ஆதார் – பான் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி இருந்து 2022 மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்டத்தின் கீழ் அபராதம் நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான கெடுவும் செப்டம்பர் 30 ஆம் தேதியில் இருந்து வருகின்ற மார்ச் 31 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனை தடை சட்டம் 1980ன் கீழ் உத்தரவு வழங்கும் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடுதல் உத்தரவை நிறைவேற்றுவதற்காக காலமும் 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.