பழனியில் பக்தர்களை கவர்ந்த ‘செல்பி ஸ்பாட்‘

 

பழனியில் பக்தர்களை கவர்ந்த  ‘செல்பி ஸ்பாட்‘

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், முருகனின் மூன்றாம் படை வீடாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் அவர்களை கவரும் விதமாக, கோயில் நிர்வாகம் சார்பில் ‘செல்பி ஸ்பாட் என்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

பழனியில் பக்தர்களை கவர்ந்த  ‘செல்பி ஸ்பாட்‘

பழனி மலை அடிவாரம் தண்டாயுதபானி நிலையம் மற்றும் மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் “நம்ம பழனி” என்ற வாசகங்களுடன் கூடிய பெயர் பலகை மின்விளக்குடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்