‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

 

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இயங்கத் தொடங்கின. உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் சூழலில், முன்பதிவோடு வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களும் உள் மாநிலங்களுக்குள் இயங்கும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல அவ்வப்போது சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!

இந்த நிலையில், சென்னையில் இருந்து பாலக்காடுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில் டிசம்பர் 9ம் தேதியில் இருந்து இயக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் டிசம்பர் 9 முதல் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாலக்காடு டூ சென்னை’ – தினசரி விரைவு ரயில் டிச.8 முதல் இயக்கம்!