பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு- 13 பேர் பலி

 

பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு- 13 பேர் பலி

பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 13 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பேருந்தில் குண்டுவெடிப்பு- 13 பேர் பலி

வடக்கு பாகிஸ்தான் பகுதியில் டாசு அணை பகுதியில் பேருந்து ஒன்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 30 சீன பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை ஏற்றி சென்றது. வழியில் பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய ஐஇடி குண்டு வெடித்தததில் 9 பொறியாளர்கள் மற்றும் இரண்டு துணை ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டா? அல்லது பேருந்துக்குள் வைக்கப்பட்ட வெடிகுணா என்பது உடனடியாக தெரியவில்லை. குண்டு வெடிப்புக்கு பின் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.